×

தேனி அருகே ஒர்க் ஷாப் உரிமையாளர் மீது தாக்குதல்: தந்தை, மகன் மீது வழக்கு

 

தேனி, ஜூன் 23: தேனி அருகே ஊஞ்சாம்பட்டியை சேர்ந்தவர் மைதீன்பிச்சை மகன் தங்கராஜா(58). இவரது மகன் சதாம்உசேன்(22). இவர்களுக்கு தேனி-பெரியகுளம் சாலையில் மஞ்சள்காவி மில் அருகே காலியிடம் உள்ளது. இந்த இடத்தினை வாடகைக்கு எடுத்து, தேனி அருகே பின்னத்தேவன்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மாயாண்டி (43) டிங்கர் பாடி பில்டிங் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் தங்களுக்கு சொந்தமான இடத்தை காலி செய்து தரும்படி தங்கராஜா மாயாண்டியிடம் தெரிவித்தார்.

ஆனால் இடத்தை காலி செய்வதில் தாமதம் ஏற்பட்டது.இதையடுத்து நேற்று முன்தினம் காலை தங்கராஜாவும், இவரது மகன் சதாம் உசேனும் ஒர்க் ஷாப்பிற்கு சென்று இடத்தை காலி செய்யச்சொல்லி மாயாண்டியை அவதூறாக பேசி இரும்புக் கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த மாயாண்டி தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாயாண்டி அல்லிநகரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் தங்கராஜா, இவரது மகன் சதாம்உசேன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தேனி அருகே ஒர்க் ஷாப் உரிமையாளர் மீது தாக்குதல்: தந்தை, மகன் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Theni ,Thangaraja ,Maidenpichai ,Oonjampatti ,Saddam Hussein ,
× RELATED தேனி மாவட்டம்; வெறிநாய் கடித்து பெண்கள், சிறுவர்கள் உட்பட 15 பேர் காயம்!